கற்கிடந்தகுளம் பங்கு புனித சூசையப்பர் ஆலய மக்களின் “சற்பிரசாத வாசாப்பு(கத்தோலிக்க மரபுசார் மற்றும் நற்கருணையின் மகிமையை கூறும் அரங்கியல் கலை வடிவம்) கடந்த 06.09.2024 வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக முருங்கன் மறைக்கோட்ட முதல்வரும் நானாட்டான் பங்குதந்தையுமான அருட்பணி அலெக்சாண்டர் சில்வா (பெனோ) அடிகளார் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினராக பெரிய பண்டிவிரிச்சான் பங்குதந்தை அருட்பணி ஸ்ரிபன் ராஜ் அடிகளாரும் கலந்துகொண்டிருந்தனர். அரங்க ஆற்றுகைக்கான அனைத்து ஒழுங்குகளையும் கற்கிடந்தகுளம் பங்குதந்தை அருட்பணி. பெய்லன் குரூஸ் அடிகளார் கலைஞர்களின் முழு ஒத்துழைப்போடும் ஆலய இறைமக்களின் ஆதரவோடும் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தார்.










