மன்னார் மற்றும் வவுனியா நிர்வாக மாவட்டங்கள் யாழ். மறைமாவட்டத்தில் இருந்து 1981 ஆம் ஆண்டு மன்னார் மறைமாவட்டமாக உதயமாகியதன் 44 ஆண்டுகள் நிறைவு விழா நன்றித் திருப்பலி 25.01.2025 சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தோட்டவெளி வேதசாட்சிகளின் இராக்கினி திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இத் திருப்பலியில் மன்னார் மறைமாட்ட தேர்வுநிலை ஆயர் வணக்கத்துக்குரிய அருட்பணி. அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. P. கிறிஸ்துநாயகம் அடிகளார், தோட்டவெளி பங்குத்தந்தையும் மன்னார் மறைக்கோட்ட முதல்வருமாகிய அருட்பணி. P. கிறிஸ்து நேசரெட்ணம் அடிகளார் மற்றும் மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்கள் துறவியர் அழைக்கப்பட்ட விருந்தினர்கள், மறைமாவட்ட பங்குகளில் இருந்து வருகைதந்த இறைமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த ஜூபிலி ஆண்டிலே “நம்பிக்கையின் திருப்பயணிகள்” எனும் கருப்பொருளில் மன்னார் மறைமாவட்டத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.மன்னார் மற்றும் வவுனியா நிர்வாக மாவட்டங்கள் யாழ். மறைமாவட்டத்தில் இருந்து 1981 ஆம் ஆண்டு மன்னார் மறைமாவட்டமாக உதயமாகியதன் 44 ஆண்டுகள் நிறைவு விழா நன்றித் திருப்பலி 25.01.2025 சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தோட்டவெளி வேதசாட்சிகளின் இராக்கினி திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இத் திருப்பலியில் மன்னார் மறைமாட்ட தேர்வுநிலை ஆயர் வணக்கத்துக்குரிய அருட்பணி. அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. P. கிறிஸ்துநாயகம் அடிகளார், தோட்டவெளி பங்குத்தந்தையும் மன்னார் மறைக்கோட்ட முதல்வருமாகிய அருட்பணி. P. கிறிஸ்து நேசரெட்ணம் அடிகளார் மற்றும் மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்கள் துறவியர் அழைக்கப்பட்ட விருந்தினர்கள், மறைமாவட்ட பங்குகளில் இருந்து வருகைதந்த இறைமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த ஜூபிலி ஆண்டிலே “நம்பிக்கையின் திருப்பயணிகள்” எனும் கருப்பொருளில் மன்னார் மறைமாவட்டத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



















