வவுனியா மறைக்கோட்ட அன்பிய பணியாளர்களுக்கான ஒரு நாள் வலுவுட்டல் பயிற்சி பாசறையானது வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் கடந்த 12.10.2024 சனிக்கிழமையன்று இடம்பெற்றது. இதிலே வவுனியா மறைக்கோட்டத்தில் உள்ள அனைத்து பங்குகளிலும் இருந்தும் 100க்கும் மேற்பட்ட அன்பிய பணியாளர்கள் பங்குபற்றி பயன்பெற்றனர். நற்கருணை ஆராதனை,கருத்துரைகள்,வலுவூட்டல் விளையாட்டுக்கள்,கலை நிகழ்வூகள்,குழு ஆய்வு என்பன ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இதனை வவுனியா மறைக்கோட்ட முதல்வரின் ஆதரவுடன் மன்னார் மறைமாவட்ட அன்பிய மத்திய குழு ஒழுங்குப்படுத்தி இருந்தது.

