கார்த்திகை மாதம் இறந்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிக்கின்ற மாதம் விசேடமாக கார்த்திகை இரண்டாம் தேதி இறந்த அனைத்து விசுவாசிகளையும் நினைவு கூர்ந்து சிறப்பான முறையில் அவர்களுக்காக மன்னார் மறைமாவட்டத்தின் அனைத்து பங்குகளிலும் உணர்வுபூர்வமாக திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன. அந்த வகையில் கடந்த 04.11.2024 அன்று மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றி இறந்த ஆயர்கள்,குருக்கள் துறவியகள் மற்றும் இறைமக்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து மறைமாவட்ட ஆயர் தலைமையில் அனைத்து குருக்களும்,துறவியரும், இறைமக்களும் இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

