தோட்டவெளி வேதசாட்சியர் இராக்கினி திருத்தலம் நிறைபேறு பலன்கொண்ட ஆலயமாக அறிவிப்பு

2025 கிறிஸ்து பிறப்பின் யூபிலி ஆண்டின் நிறைபேறு பலங்களை மன்னார் மறைமாவட்டத்தின் அனைத்து இறைமக்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் இன்று 10.01.2025 சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. P. கிறிஸ்துநாயகம் அடிகளார் தலைமையில் தோட்டவெளி வேதசாட்சியர் இராக்கினி திருத்தலத்தில் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, திருச்சிலுவை ஆசிர்வதிக்கப்பட்டு, ஸ்தாபிக்கப்பட்டது. அதேவேளை, கடந்த 05.01.2025 ஞாயிற்றுக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் புனித கதவு திறந்து வைக்கப்பட்டது, 07.01.2025 செவ்வாய்க்கிழமை பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தலம் […]

Continue Reading

ரோகிங்யா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் – NECC இலங்கை அரசுக்கு வேண்டுகோள்!

முல்லைத்தீவு: வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு (NECC), பெண்கள் குழுக்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இணைந்து இன்று (09.01.2025) முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுகூடி, ரோகிங்யா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என இலங்கை அரசுக்கு திறந்த வேண்டுகோள் விடுத்தனர். 2024 டிசம்பர் 19ஆம் திகதி, இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட ரோகிங்யா அகதிகள், தற்போது முல்லைத்தீவில் உள்ள கேப்பாப்புலவு விமானப்படைத் தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வகதிகள் சிவில் நிர்வாகத்தின் கண்காணிப்பின்றி […]

Continue Reading

குருத்துவ, திருத்தொண்டர் அருட்பொழிவு – 09.01.2025

  விசுவாசத்தின் விளைநிலமாகத் திகழும் மன்னார் வேதசாட்சிகளின் மண்ணில் இருந்து இறைவனின் ஆசீரால் திவ்விய இரட்சகர் சபைக்கு மன்னார் மறைமாவட்டத்தில் இருந்து திருத்தொண்டர் அருட்சகோதரர் பெலிக்ஸ் பெர்னாண்டோ அவர்கள் குருவாகவும், திருவுளப்பணியாளர் சபைக்கு அருட்சகோதரர்கள் சஞ்சுதன் சவுந்தரம், ஜெரோம் மரியசீலன் ஆகிய இரண்டு பேரும் திருத்தொண்டர்களாகவும் இன்று தை மாதம் 09ம் தேதி வியாழக்கிழமையன்று காலை 9.30 மணிக்கு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் […]

Continue Reading

பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தல புனிதக் கதவு திறந்து வைக்கப்பட்டது

2025 கிறிஸ்து பிறப்பின் யூபிலி ஆண்டின் பரிபூரண பேறுபலங்களை மறைமாவட்டத்தின் அனைத்து இறைமக்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் கடந்த 07.01.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 20.30 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்தின் பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தலத்தில் புனித கதவு திறந்துவைக்கும் நிகழ்வு நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட முன்னை நாள் குருமுதல்வர் அருட்பணி விக்டர் சோசை அடிகளார் அவர்களினால் இந்த புனித கதவு ஆசீர்வதித்து திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த திரு நிகழ்வில் பல அருட்தந்தையர்கள், ஏராளமான இறைமக்கள் […]

Continue Reading

அருட்பணி.மேரிபஸ்ரியன் அடிகளின் 40 வது ஆண்டு நினைவாக

மக்களுக்காக தனது இன்னுயிரை ஈந்த முன்னை நாள் வங்காலை பங்குத்தந்தை அமரர் மேரி பஸ்டியான் அடிகளார் அவர்களது 40ஆவது ஆண்டு நிறைவு நாள் இரங்கல் திருப்பலியும் நினைவுகூறல் நிகழ்வும் கடந்த 06.01.2024 திங்கள் அன்று காலை 6.30 மணிக்கு திருப்பலியும், அதனை தொடர்ந்து வணக்க நிகழ்வும் இடம்பெற்றது. இதில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தந்தை கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களும், வங்காலை மண்ணில் கடமையாற்றிய மற்றும் வங்காலை மண்ணைச் சேர்ந்த குருக்கள் துறவிகளும் இறைமக்கள் என […]

Continue Reading

மன்னாரில் புனித செபஸ்தியார் பேராலயத்தில் புனித கதவு திறப்பு விழா

சிறப்பு ஜூபிலி ஆண்டின் பரிபூரண பலன்களை இறைமக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் கடந்த 05/01/2025 அன்று மாலை 3.30 மணிக்கு புனித செபஸ்தியார் பேராலயத்தில் ஆயத்தம் செய்யப்பட்ட புனித கதவைத் (Holy Door) திறந்து வைத்துள்ளார். ஜூபிலி ஆண்டானது, 25 ஆண்டுகளுக்கு ஒருமுறையே வருகின்றது. அதிலும் கத்தோலிக்க இறைமக்களுக்கு இது ஒரு சிறப்பு மிக்க ஜூபிலி ஆண்டாகும் ஏனென்றால் இயேசுவின் மனித அவதாரத்தின் 2025 ஆண்டுகள் […]

Continue Reading

சிறப்பாக நடைபெற்று முடிந்த கலையருவியின் ஒளி விழா – 2024

கலையருவியின்- மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு ஆணைக்குழுவின் ஒளி விழா நிகழ்வானது கடந்த 29.12.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2:30 மணியளவில் கலையருவி கேட்போர் கூடத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களும் ,மன்னார்  மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் மற்றும் முன்னைய நாள் குருமுதல்வர் அருட்பணி. விக்ரர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோகர்கள் , அருட் சகோதரிகள், மற்றும் […]

Continue Reading