அவர் நம்மை அன்புகூர்ந்தார் திருத்தந்தையின் சுற்றுமடல் 24.10.2024

2024 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று இயேசுவின் திருஇருதயம் குறித்த அவர் நம்மை அன்புகூர்ந்தார் என்ற நான்காவது சுற்றுமடலில் மொத்தம் 220 எண்களில் மனித மற்றும் இறை அன்பில் இயேசு கிறிஸ்துவின் திருஇருதய அன்பு குறித்து எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். நமக்குள் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் காயங்களை ஆற்றுவதற்கும்,அன்பு மற்றும் பணியாற்றும் திறனை வலுப்படுத்துவதற்கும்,இயேசுவினுடைய திருஇதயத்திலிருந்து வாழ்வளிக்கும் நீரின் ஆறுகள் நம் அனைவருக்குள்ளும் பாயவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். கடந்த அக்டோபர் 24 ஆம் […]

Continue Reading

தொடர்பாடல் பணி இதயத்துடன் தொடர்பு கொள்ளும் பணி – திருத்தந்தை பிரான்சிஸ்

தகவல் தொடர்பாடல் பணி என்பது கடவுளின் ஓர் அழைப்பு எனவும் இப்பணி எல்லாவற்றிற்கும் மேலாக படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப ஊடகங்களை திறமையாக பயன்படுத்தி இதயத்துடன் நெருக்கமாக தொடர்புகொள்ளும் மறைபணியாக அமையும் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி வியாழக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் திருப்பீட செய்தித்தொடர்பாளர்களை சந்தித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதர் பவுலின் வார்த்தைகளான உண்மையை இடைக்கச்சையாகக் கட்டிக் கொண்டு […]

Continue Reading

புதுப்பித்தல் என்பது உயிர் துடிப்பு மற்றும் அருளின் சான்றாகும்” திருத்தந்தை பிரான்சிஸ்

திருஅவையின் அனைத்து கர்தினால்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதில் திருப்பீடத்தில் இடம்பெற்றுவரும்பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதையும் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை பொறுப்புணர்வு மற்றும் ஒருமைப்பாட்டுணர்வை வலியுறுத்தியும் உள்ளார். மேலும் திருஅவையின் உயர்மட்ட நிர்வாக அவையில் சீர்திருத்தங்கள் கொணரப்பட்டு 10 ஆண்டுகளநிறைவுற்றுள்ளதை அக்கடிதத்தில் சுட்டிக்காட்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சீர்திருத்தம் தொடர்புடைய கர்தினால்களின் பங்களிப்பு மற்றும் பொறுப்புடைமை குறித்தும் நினைவூட்டியூள்ளார். திருஅவை எப்போதும் புதுப்பிக்கப்பட்டு மறுமலர்ச்சியைக் காண்பதாக இருக்க வேண்டும் என்பதையும் […]

Continue Reading

இளைஞர்களின் திறமையூம் படைப்பாற்றலும் நமக்குத் தேவை” திருத்தந்தை பிரான்சிஸ்

“இளைஞர்களின் திறமையும் படைப்பாற்றலும் நமக்குத் தேவை” திருத்தந்தை பிரான்சிஸ். செப்டம்பர் 23 திங்கள்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் கிறிஸ்துமஸ் போட்டி – 2024 இல் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் ஏறக்குறைய 80 பேரைச் சந்தித்தபோது “ உலகிற்கு உண்மையான அமைதியைக் கொண்டுவரும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு இன்று நமக்கு தேவை என்றும் பலநூற்றாண்டுகளாக உலகில் உடன்பிறந்த உறவின் பாதைகளை ஒவ்வொரு மொழி மற்றும் கலாச்சாரத்தின் துணைகொண்டு எண்ணற்ற கலைஞர்களை கிறிஸ்துமஸ் போட்டி ஊக்கப்படுத்தியுள்ளது” என்று கூறியதோடு இப்போட்டியின் பங்கேற்பாளர்கள் […]

Continue Reading