மூத்த குடிமகன் கௌரவிப்பு விழா

கடந்த 29.01.2025 புதன்கிழமையன்று அடம்பன் சிரேஸ்ர பிரஜைகள் சங்கத்தின் வருடாந்த மூத்த குடிமகன் கௌரவிப்பு விழா 2024 ஆனது அடம்பன் பல்நோக்கு மண்டபத்தில் சிறப்பாக இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு. அரவிந்தராஜ் அவர்களும்ரூபவ் சிறப்பு விருந்தினர்களாக மாந்தை மேற்கு உதவிப் பிரதேச செயலாளர் திரு. டிலைக்சன்ரூபவ் அடம்பன் பாடசாலை அதிபர் திரு. கிறிஸ்ரியான் ஆகியோருடன் அடம்பன் கிராம அலுவலர்ரூபவ் டெப்லிங் நிறுவனப் பணியாளர்கள் ஏனைய சிரேஸ்ர பிரஜைகள் சங்கத்தின் […]

Continue Reading

மன்னார் தீவுப் பகுதிக்குள் அடுத்த கட்ட காற்றாலை அமைக்க திட்டம் – மாவட்ட அரசாங்க அதிபர்

இன்றைய தினம் மன்னார் மாவட்டத்திலே தாழ்வுபாடு மற்றும் சவுத்பார் போன்ற இடங்களிலே இலங்கை மின்சார சபையினரால் முன்னெடுக்கப்பட இருக்கின்ற 20 மெகாவாட் காற்றாலை திட்டம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இன்று இந்த கூட்டத்திலே இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் மற்றும் இத்திட்டத்தினை மன்னார் மாவட்டத்தில் அமுல்படுத்த இருகின்ற வின்ஸ்கேப் பிரைவேட் லிமிடெட் இன் பணிப்பாளர்களும் மற்றும் அவர்களுடன் இணைந்து சமூகவியலாளர்கள் பேராசிரியர்களும் இன்றைய கூட்டத்திலே கலந்து கொண்டார்கள். மேற்கூறப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் […]

Continue Reading

மன். புனித சவேரியார் ஆண்கள் கல்லூர் புதிதாக சூரிய மின்சக்தி திட்டம்

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் கட்டமைப்பு ரீதியான அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டு பாடசாலையின் ஐக்கிய இராச்சியத்தின் பழைய மாணவர் சங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி செயற்திட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 17.01.2025 அன்று பாடசாலை அதிபர் அருட்சகோதரர் S.சந்தியாகு FSC அவர்களின் தலைமையில் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது. சமகாலத்தில் அதிகரித்துச் செல்லும் பாடசாலையின் மின்கட்டண செலவீனத்தை குறைக்கும் முகமாக சிறந்த திட்டமாக சூரிய படலம் 25 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது […]

Continue Reading

“நாமும் சாதனையாளர்கள்” உற்பத்திக் கண்காட்சி

கறிற்றாஸ் மன்னார் வாழ்வுதய நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேவையுடையவர்களின் உற்பத்திக் கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்தல் நிகழ்வு கடந்த நவம்பர் மாதம் 22ம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்பணி அருள்றாஜ் அடிகளாரின் தலைமையில் “நாமும் சாதனையாளர்கள்” என்னும் கருப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் கலந்து கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வின் ஆரம்பத்தில் விசேட தேவையுடையவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் தொடர்ந்து உற்பத்திப் […]

Continue Reading

“மெய்மை” குறுந்திரைப்பட வெளியீடு

யாழ்ப்பாண பல்கலைகழக பொன்விழா கொண்டாட்டத்தின் ஒர் அங்கமாக ஊடகத்துறை யாழ் பல்கலைகழக ஏற்பாட்டில் குறுந்திரைப்பட விழா – 2024 கடந்த 11.10.2024 வெள்ளிக்கிழமையன்று கைலாசபதி கலையரங்கில் பிற்பகல் 02:00 மணி தொடக்கம் மாலை 5:00 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறை நான்காம் வருட மாணவர்கள் 31 பேரால் தயாரிக்கப்பட்ட குறும்படங்களில் இருந்து 10 குறும்படங்கள் தெரிவு செய்யப்பட்டு திரையிடப்பட்டன. தெரிவு செய்யப்பட்ட 10 குறும்படங்களில் விடத்தல் தீவு கிராமத்தின் திரு.திருமதி […]

Continue Reading

யாழ் பல்கலைக்கழக பொன்விழா நிகழ்வுகளின் ஓர் அங்கமாக தமிழியல் நூலகத் திறப்பு விழா

யாழப்பாண பல்கலைக்கழக பொன்விழா நிகழ்வுகளின் ஓர் அங்கமாக முன்னெடுக்கப்பட்ட தமிழியல் நூலகத் திறப்பு விழா கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி வியாழக்கிழமையன்று நடைபெற்றது. தமிழியல் சார் ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட விசேட நூலகப் பிரிவிற்கான நிதி அனுசரணை சிங்கப்பூர் கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை நிதியம் வழங்கியிருந்தது. துமிழியல் நூலகம் எனப்பெயர் பெறும் இப்பிரிவானது யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்திற்கும் அப்பால் விரிந்த தளத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு உரியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் நினைவுக் கல்லும் […]

Continue Reading

IMACS போட்டியில் மாகாண ரீதியாக தங்கபதக்கத்தை வென்றார் மன்னார் மாவட்ட சிறுமி ரியானா.

மன்னார் மாவட்டத்தின் விடத்தல்தீவு கிராமத்தின் திரு. திருமதி இராஜநாயகம்பெமிலா செறின் தம்பதிகளின் புதல்வியும் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் அ.த.க பாடசாலை மற்றும் மன்னார் மாணவியுமான செல்வி ரியானா அவர்கள் மாகாண ரீதியாக நடைபெற்ற போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். வெற்றி பெற்ற செல்வி ரியானாவை மன்னா பத்திரிகை மனதார பாராட்டி வாழ்த்துகின்றது.

Continue Reading

“முதலடி” கையெழுத்து சஞ்சிகை வெளியீடு

விடத்தல்தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்தில் வாசிப்பு மாதம் அனுஸ்டிக்கப்படுவதை முன்னிட்டு பாடசாலையில் தரம் 12 கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவி செல்வி அ. அபிநயா அவர்களால் “முதலடி” எனும் கையெழுத்து சஞ்சிகையானது “சஞ்சிகை தினமான” கடந்த 22.10.2024 செவ்வாய்க்கிழமையன்று பாடசாலை காலைக்கூட்டத்தில் வெளியீடு செய்யப்பட்டு பாடசாலை நூலகத்துக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. வாசிப்பின் முக்கியத்துவம் பற்றியும் அதன் மூலமான “எழுத்தாக்க திறன் விருத்தி” பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் இச் சஞ்சிகையை வெளியீடு செய்த செல்வி அபிநயா அவர்களை […]

Continue Reading

“உயிர்க்கும் நினைவுகள்” நூல் வெளியீட்டு விழா

கடந்த 13.10.2024 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 05.00 மணிக்கு திருமதி. ஜெயாபாலாஜியின் படைப்பாக்கத்தில் உருவான “உயிர்க்கும் நினைவுகள்” நூல் வெளியீடானது ஜெயாபாலாஜி அவர்களின் இல்லத்தில் பங்குதந்தை மற்றும் கிராம மக்கள் மத்தியில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக அளவக்கை பங்குத்தந்தை அருட்பணி. சீ. யேசுபரநாதன் (டிக்ஸன்) அடிகளாரும் சிறப்பு விருந்தினர்களாக மன்னூரான் சிஹார் (கவிஞர் மற்றும் தலைமன்னார் துறை அ.மு.க.பாடசாலை அதிபர்)இ ஓய்வூபெற்ற கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.எஸ்.டேவிட் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். நூலினை வெளியீடு செய்த ஜெயாபாலாஜி அவர்களை மன்னா […]

Continue Reading

மாபெரும் கரப்பந்தாட்ட போட்டி

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய ஆணைக்குழுவின் அனுசரனையுடன் அளவக்கை கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்டபோட்டியானது கடந்த அக்டோபர் மாதம் 16,17 ஆகிய இரு தினங்களிலும் அளவக்கை பங்கு மாவிலங்கேணி கிராமத்தின் பாடசாலை மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. கிறிஸ்துநாயகம் அடிகளாரும் கௌரவ விருந்தினராக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய ஆணைக்குழுவின் இயக்குநர் அருட்பணி விக்ரர் சோசை அடிகளாரும் சிறப்பு […]

Continue Reading